search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை"

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் எதிரொலியாக குளு பகுதியில் வெள்ளப்பெருக்கில் பஸ்,லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. #Schoolsclosed #HPrains
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில்  சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 

    கடந்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் திக்குமுக்காடிய இமாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.

    குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த குளு மற்றும் மனாலி பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல பகுதிகளில் கரை புரண்டோடும் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

    இன்றும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குளு மற்றும் கின்னவுர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Schoolsclosed  #HPrains
    ×